Posts

விசுவாச மக்கள் ஜெபிக்கத்தக்க ஜெபக்குறிப்புகள்.

1, தமிழக அரசின் கிறிஸ்தவ நலவாரியத்தின் உறுப்பினராக பெந்தெகொஸ்தே சபைகளின் மாமன்ற (Synod) அமைப்பை சேர்ந்த தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதற்காகவும், பெந்தெகொஸ்தே திருச்சபைகளுக்கு கிடைத்த அரசு அங்கீகாரத்திற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.  2, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு,  அதன் உடனடி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ₹5,426 கோடி கடன் உதவி வழங்க இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.  3, சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 2 மாதங்களாக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல்  விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஷாங்காயில் வசிக்கும் சுமார் 2 கோடி 50 லட்சம் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.  4, இந்தியாவில் நதிநீர் இணைப்பு திட்டங்களை இந்திய அரசு விரைவில் செயல்படுத்தும் படி ஜெபிப்போம்.  5, தமிழகத்தில் அதிகமாக 79,154 கோயில்களும்,  மகாராஷ்டிராவில் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளதாகவும்  ஆய

அல்லாஹ் யார்?

அல்லாஹ் (Allah) என்பது அரபிச்சொல்  Al என்ற  சுட்டுச் சொல்லுடன்  Ilah என்ற பெயர்ச்சொல் சேர்ந்து வருவதால் அது அல்+இலாஹ் = அல்லாஹ் ஆகும். அரபி மொழியில் கடவுளைக் குறிக்கும் பொதுவான வார்த்தை அல்லாஹ், அவ்வளவே..!  2500-க்கும் அதிகமான முறை குர்-ஆனில் வருகிறது.  இஸ்லாம் வருவதற்கு முன்பு,  இஸ்லாம் வருவதற்கு முந்தைய அரேபியாவில், முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே அல்லாஹ் முக்கியமான கடவுள்களில் ஒருவராக அரேபியர்களுக்கு இருந்திருக்கிறார். அல்லாஹ் என்பது, பொதுவான ஒரு பெயராக இருந்தாலும்,  இருப்பதிலேயே சிறந்த “அழகிய திருநாமங்கள்” (பெயர்கள்) அல்லாஹ்வுக்கு இருப்பதாக குர்-ஆன் 7:180; 17:110; 20:8; 59:24 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.  குர்-ஆன் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களின் அடிப்படையில், முஸ்லீம்கள் அல்லாஹ்வின்  99 பெயர்களை வரிசைப்படுத்தி, மனப்பாடம் செய்து, அவைகளை அடிக்கடி சிந்திக்கின்றனர். அல்லாஹ்வுக்கு 99 பெயர்களை வைத்து, முஸ்லீம்கள்  தொழுகை செய்தாலும், இஸ்லாமிய நம்பிக்கையின் படி, அல்லாஹ்வுடன் எவரும் நேரடியாக  உறவோ அல்லது தொடர்போ வைத்துக் கொள்ள முடியாது. இஸ்லாமில் அது தடைசெய்யப்பட்டிருக்கிறது.  முஹம்மது

கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பது ஏன்? (சாதி அமைப்பை தூக்கிப்பிடிக்கும் பதிவல்ல இது )

குறிப்பு: புராடஸ்டண்ட் கிறிஸ்தவ வரலாற்றின் பின்னணியில் இதை எழுதியிருக்கிறேன். இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்து கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கும் பொருந்தும். பெரும்பாலும் சாதியை குறித்து பேசும் போதெல்லாம் மனுதர்மத்தை பற்றிய பேச்சும் எழும். அப்போதெல்லாம் எதிர்வினையாற்றும் அவர்கள் கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லையா? கிறிஸ்தவத்தில் சாதி இருக்கிறது என்று சொல்வார்கள். பல பேர்களுக்கு இதிலுள்ள அடிப்படையான காரணம் என்னவென்று தெரியாததினால் ஒரு சில விஷயங்கள் விளக்கிச் சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் சாதி பார்க்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். இந்தியாவில் கிறிஸ்தவம் பரம்புவதற்கு தமிழ்நாட்டில் மூன்று முக்கிய கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் காரணம். குறிப்பாக தென் தமிழகத்தில் லண்டன் மிஷன், எஸ் பி ஜி மிஷன், சிஎம்எஸ் மெஷின் போன்ற அமைப்புகள் கிறிஸ்தவத்தை தீவிரமாக பரப்பினர். இவை எல்லாமே அங்கிலிக்கன் சர்ச் என்கிற அமைப்பில் கீழுள்ள மிஷனரி அமைப்புகள். அந்த காலங்களில் இங்கிலாந்து நாட்டில் மற்றும் அயர்லாந்து நாட்டில் சர்ச் சார்ந்து இல்லாமல் மிஷனரி இயக்

நெல்லை வரலாற்றில் மறைக்கவியலாத சுவடு:-

பாளையங்கோட்டையில்  சாரா டக்கர் கல்லூரி, மட்டுமல்ல, சாரா டக்கர் ஹையர்  செக்கண்டரி ஸ்கூல், சாரா டக்கர் டீச்சர் டிரெய்னிங் ஸ்கூல் என்ற பலகைகளையும் பார்க்க முடியும். ஒருவேளை  இது உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்.. இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, ஒருசிறு பெண் இருந்தாள்.. அவள் பெயர்தான் சாரா டக்கர். அவளால் ஒன்று மட்டும்தான் செய்ய முடியும் ஒரு சாதாரண வீல் சேரில் ஆலயத்துக்கு செல்வாள் அப்போதெல்லாம் இப்போது உள்ள மாடர்ன் வீல் சேர் கிடையாது. ஒருநாள் தென்னிந்திய மிஷனரி ஜான் டக்கர் (சாரா டக்கரின் சகோதரர்) அந்த ஆலயத்தில் பேசினார்.. தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலேயே கோயிலுக்கு பொட்டுக்கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி ஆக்கப்படுகிறார்கள் என்று அழுகையோடு சொன்னார். பெண்கள் படிப்பது கேவலம் என்று கருதுகிறார்கள் என்றார். நொறுங்கிய மனதுடன்..,  வீட்டுக்கு வந்தாள் சாரா அவளின் அப்பாவின் பெயர் டக்கர் அவள் ஆண்டவரிடம் சொன்னாள், "ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய் இருக்கிறது.. ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்ட

களிமேடு கிராம மக்களுடைய ஆறுதலுக்காக ஜெபிப்போம்.

 தன் மக்களை இழந்து வருந்தும், களிமேடு கிராம மக்களுடைய ஆறுதலுக்காக ஜெபிப்போம். அப்பர் என்ற பாடகருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு பகுதிதான் தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட களிமேடு கிராமம்.  களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வடகரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. சித்திரை சதய நாளில் அப்பருக்கு குரு பூஜை விழா நடக்கிறது. குருபூஜை நாளன்று மலர்களைக் கொண்டு அலங்கரித்து, அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேர் வீதி உலா வரும். சில ஆண்டுகளாக அப்பர் உருவச்சிலை வைக்கப்பட்டு ஊர்வலம் நடக்கிறது. நேற்று (26ம் தேதி ) நடந்த தேர்த்திருவிழாவில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. மின் விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட சப்பரத்தை வீதி சுற்றி வந்துள்ளனா். அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பர அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய் மேலே உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்டிருக்கிறது. இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தா
Image
ஈஸ்டர்  கிரேக்கா்களுடைய புராணக் கதையில், இஸ்தார் என்ற பெண் தெய்வம் தன் மகனையே மணந்து கொண்டதாக உள்ளது. இந்த அசுத்த தேவதைதான் கிரேக்க, பாபிலோனிய பாரம்பரியங்களில் கடவுளாகவும் இருந்துள்ளது.  இந்த இஸ்தார் தனது செத்துப்போன கணவனை உயிர்த்தெழ வைப்பதற்காக 40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து பின்னர் அவனை உயிருடன் மீட்டதாகவும் புராணம் கூறுகிறது.  இந்த இஸ்தார் தேவதையின் 40 நாள் விரதத்தையே கத்தோலிக்கா்கள் கஸ்தி நாள் எனவும், C.S.I சபையினா் "லெந்து" நாட்கள் எனவும் கடைபிடிக்கின்றனா்.  இந்த அசுத்த தேவதையின் பெயரே "ஈஸ்டர்" எனவும் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது.  இந்த பிசாசின் வஞ்சகத்தை பைபிளுடன் கோர்த்து விடுவதற்கு ஏதுவாக, இஸ்ரவேலர் (யூதர்) இன்றும் கடைபிடிக்கும் பஸ்கா பண்டிகை காலக்கனக்கையொட்டி நடைமுறைப்படுத்தி கிறிஸ்தவ விசுவாசிகளை நம்ப வைத்தது ஆதிகாலத்தில் தோண்றிய RC திருச்சபை. முதல் நூற்றாண்டில் ஆதித் திருச்சபையை வழி நடத்திய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு போன்ற நிகழ்வுகளை விழாக்களாக அனுசரிக்கவில்லை, புதிய உடன்

எந்த கறி சாப்பிடலாம்...? சண்டைய மூட்டறான் ஜாக்கிரதை..

நண்பனுடன் ஒரு உரையாடல், நண்பன் : ஆட்டுக்கறி  ரூ.450, ரூ500 என விலை ஏறி போச்சு .                 ஜனங்க என்ன பண்ணுவாங்க? நான் : மாட்டு கறியை சாப்பிட விடாமா ..                 BJP காரனுங்க வேறா கலகம் பண்றானுங்க . நண்பன் : இயற்கையால் படைச்சது எல்லாம் மனிதன் வாழாத்தான் ..           ஆனா .. இதுல அரசியல் பண்றாங்களே .. நான் : அசைவம் சாப்பிட்டே ஆகனும்ன்னா ...           வேற கறிக்கு மாற வேண்டியதுதான் ..             சேவல் , கோழி சாப்பிட வேண்டியதுதான் நண்பன் : சேவல் , மயில் எல்லாம் முருகன் வச்சு இருக்காரு ..           முருக பக்தர் பிரச்சனை பண்ணுனா .. நான் . மீன் சாப்பிட வேண்டியது தான் நண்பன் : அது முடியாது , தசாஅவதாரத்தில் கடவுள் எடுத்ததே              மச்ச அவதாரம் தான் .. நான் : சீனாக்காரன் மாதிரி பாம்பு கறி .. நண்பன் : பாம்பு சிவபெருமான் கழுத்து லேயே சதா இருக்குது நான் : அப்ப பன்றி கறி தான் நண்பன் . அதுவும் பிரச்சனை தான் , விஷ்ணு அவதாரத்துலே             முக்கிய